×

ஊழியர்களை அறைக்குள் வைத்து பூட்டினார் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய தாசில்தார்

திருப்பூர்: திருப்பூர் அருகே கத்தியை காட்டி பெண்களை மிரட்டிய தாசில்தார் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாசில்தாராக கடந்த மாதம் 11ம் தேதி முரளி (46) என்பவர் நியமிக்கப்பட்டார்.  இவர், கடந்த சில நாட்களாக திடீரென அலுவலர்களை மிரட்டுவதுடன், ஒருமையிலும் பேசி வந்துள்ளார். இந்நிலையில், அவர் கடந்த 29ம் தேதி தாலுகா அலுவலக ஊழியர்கள் அனைவரையும் வரவழைத்து, அறைக்குள் வைத்து கதவை பூட்டி  சென்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்த ஊத்துக்குளி போலீசார், அனைவரையும் விடுவித்தனர். இது குறித்து விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் செங்கப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு,  அந்த வழியாக வந்த பெண்களிடம் கத்தியைக் காட்டி தகராறு செய்ததாக தெரிகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தாசில்தார் முரளியை மருத்துவ விடுப்பில் செல்லவும், முழுமையாக குணமடைந்த பின்பு பணியில் சேரவும்  அறிவுறுத்தியுள்ளது.



Tags : room ,women , He locked the staff in the room and threatened the women with a knife
× RELATED வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த ₹22 ஆயிரம் சிக்கியது அணைக்கட்டு அருகே