சென்னை : காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் மடாதிபதி ஞானப்பிரகாச தேசிகர் (87) நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.காஞ்சிபுரத்தில் மிகப் பழமையான தொண்டை மண்டல ஆதீனம் உள்ளது. இந்த மடத்தின் 232 ஆவது மடாதிபதியாக ஞானப்பிரகாச தேசிகர் இருந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் காலமானார்.