×

எஸ்சி,எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகையை முடக்கினால் போராட்டம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தை கைவிடுவதற்கு மத்திய பாஜ அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியை தருகிறது. எனவே, பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் 11, 12ம் வகுப்புகளில் படிப்பதற்கு மத்திய அரசிடமிருந்து பெற்று வருகிற கல்வி உதவித்தொகையை மத்திய பாஜ அரசு குறைப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதில் பிரதமர் மோடி தலையிட்டு பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை மீண்டும் தொடர்கிற வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், மத்திய பாஜ அரசின் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டத்தை முடக்குகிற நடவடிக்கைக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.


Tags : SC , SC, SD students Struggle to disable scholarships
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்; 50...