சென்னை: சட்டத்துக்கு புறம்பான சுங்கச்சாவடிகளை அகற்ற கோரி சோழிங்கநல்லூரில் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 10ம் தேதி நடக்கிறது. இதில் எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.இதுகுறித்து சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கை: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கம் வசூலிக்கும் உரிமை 15 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனங்களோ சாலை, பராமரிப்பு செலவுகளை விட பலமடங்கு ஆதாயம் பார்த்து விட்டன. மக்களை சுரண்டுகிற போக்கு ஒருபுறமிருக்க, தேசிய நெடுஞ்சாலை கட்டணம் நிர்ணயித்தல் குறித்த மத்திய அரசின் சட்டத்தின்படி, மாநகராட்சி எல்லையில் இருந்து 10 கி.மீட்டருக்கு அப்பால் மட்டுமே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என்பது சட்ட விதி.