சென்னை: பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு தொடர்பான முடிவுகளுக்கு இடைகால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியர் தேர்வு ரத்து செய்வதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள போது தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை சிலர் வீடியோ எடுத்து யூ-டியூப்பில் வெளியிட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.