×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 31,118 பேர் பாதிப்பு; 482 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.37 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 94.62 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 31,118 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,62,810 ஆக உயர்ந்தது.

* புதிதாக 482 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,37,621 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 41,985 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால், குணமடைதோர் எண்ணிக்கை 88,89,585 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,35,603 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 93.94% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.45% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.60% ஆக உயர்ந்துள்ளது.

Tags : India ,Department of Health ,deaths , India, Corona, 31,118 people affected, health department information
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...