ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் ஒன்றிய அலுவலகத்தில், எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், அகஸ்டின் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் குணசேகரன் (திமுக) பேசும்போது, “கிராமங்களுக்கு மாநகர பஸ் இயக்குவது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தபோது ஒன்றிய சாலைகளாக உள்ளதை மாவட்ட சாலைகளாக மாற்றுங்கள் பஸ்களை இயக்குகிறோம் என்கிறார்கள். சென்னங்காரணை கிராமத்திற்கு நிறுத்தப்பட்டுள்ள பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்” என்றார். இதில் திமுக கவுன்சிலர்கள் குணசேகரன், கோகிலா, ஜமுனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.