ஒரத்தநாடு: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பிரசார பயணத்தை. நேற்று மீண்டும், தஞ்சை மாவட்டத்தில்ர் துவங்கினார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த தென்னமநாட்டில் உள்ள மண்டபத்தில், விவசாயிகளை நேற்று உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 2021ல் திமுக தான் வெற்றி பெறப்போகிறது. அப்போது உங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். என்னை இந்த பயணத்தை தொடங்கிய நாட்களிலிருந்து கைது செய்தனர். அதன் பிறகு மக்களை சந்திக்க சென்றால், கூட்டம் அதிகமாக இருக்கிறது.
அதனால் அரங்கத்தில் கூட்டம் நடத்தி கொள்ள வேண்டும் என்று கூறினர். நான் கலைஞரின் பேரனாகவோ, தலைவரின் மகனாகவோ வரவில்லை, உங்கள் வீட்டு பிள்ளையாக வந்துள்ளேன். எத்தனை தடைகள் வந்தாலும் அதனை உடைத்து விட்டு மக்களை சந்திப்பேன் எனறார்.. பின்னர் நிருபர்களிடம் உதயநிதிஸ்டாலின் கூறுகையில், .திட்டமிட்டபடி 10 நாள் பயணம் தொடரும். வேளாண் சட்டம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியா போல தமிழக விவசாயிகளும் போராட்ட களத்திற்கு தயாராகி வருகிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக திமுகவும் பங்கேற்பது குறித்து தலைமை முடிவு எடுக்கும் என்றார்.