சென்னை: மாநகர் போக்குவரத்துக்கழத்துக்கு சொந்தமான மகாகவி பாரதி நகர் பணிமனையை நாளை (30ம் தேதி) முதல் மூடப்படுகிறது. இதுகுறித்து எம்டிசி மேலாண் இயக்குநர் இளங்கோவன், மகாகவி பாரதி நகர் பணிமனையின் கிளை மேலாளர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த மார்ச் 9ம் தேதி 304வது நிர்வாக குழும கூட்டம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி மகாகவி பாரதிநகர் பணிமனையின் நிர்வாக செலவீனங்களை குறைக்கும் பொருட்டு மகாகவி பாரதி நகர் பணிமனையை வரும் 30ம் தேதி முதல் மூடலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே மகாகவி பாரதி நகர் பணிமனையை 30ம் தேதி முதல் மூடுவதற்கும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.