திருப்பதி: திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக 10 நாட்கள் சொர்க்க வாசல் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக 1 நாள் மட்டுமே சொர்க்க வாசல் திறந்திருக்கும் நிலையில் 10 நாட்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி திருமலையில் டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதி வரை சொர்க்க வாசல் திறந்திருக்கும் என அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.