×

பாஜகவுடனான கூட்டணியால் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரிக்குமா அல்லது குறையுமா ?: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

கோபி, : பாஜகவுடனான கூட்டணியால் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பது மக்கள் கையில் தான் உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு தான் தெரிந்து கொள்ள முடியும், என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குருமந்தூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது: ஆன்லைன் மூலமாக அரையாண்டு தேர்வு நடைபெறுவதாக வந்த தகவல் குறித்து எதுவும் எனக்கு தெரியாது. புதிய கல்வி கொள்கை குறித்து, பொதுமக்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய கல்வி கொள்கையை 2023ல் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதிமுகவின் தேர்தல் பிரச்சாரம் குறித்து உயர்மட்ட குழு அறிவிக்கும். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவது குறித்து இதுவரை ஆலோசனை செய்யவில்லை. பாஜகவுடனான கூட்டணியால் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பது மக்கள் கையில் தான் உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு தான் தெரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Tags : AIADMK ,Senkottayan ,BJP , BJP, AIADMK, Minister Senkottayan, Description
× RELATED ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக உள்பட மும்முனைப்போட்டி