திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணியாற்றில் 96.25 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வெள்ளநீர் மட்டம் முந்தைய நாட்களின் அளவை விட 148 செ.மீ. அதிகரித்துள்ளது.