செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியின் நிர்ணயிக்கப்பட்ட கொள்ளளவு 23.3 அடியாக உள்ள நிலையில், தற்போது 23.5 அடியை எட்டியுள்ளது. நீர் வரத்து, கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பியுள்ளது.