×

டிசம்பர் மாத ரேஷன் பொருள் வாங்க 29ம் தேதி வீடுவீடாக டோக்கன் விநியோகம்

சென்னை: டிசம்பர் மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க 29ம் தேதி முதல் 3 நாட்கள் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படுகிறது.இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ரா சவான் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கூட்டுறவு துணை ஆணையாளர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:டிசம்பர் மாத அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற 29ம் தேதி (நாளை), 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய மூன்று நாட்கள் வீடுதோறும் சென்று நியாய விலை கடை ஊழியர்கள் மூலம் டோக்கன் வழங்க வேண்டும்.

நாள் ஒன்றுக்கு 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் டோக்கன் வழங்க வேண்டும்.அதன்படி, டிசம்பர் 2ம் தேதி முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும் வகையில் தேதி, நேரம் உள்ளிட்டவைகளை டோக்கனில் தெரிவிக்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களும் டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் பொருட்கள் வாங்க செல்ல வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் வாங்க வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட வேண்டும். ஒரு மீட்டர் இடைவெளியில் தனிமைப்படுத்தி பொருட்கள் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : households , Buy December ration item Home on the 29th Token distribution
× RELATED ஏப்.3 முதல் தீவிர பிரசாரம் 8 கோடி...