டெல்லி: நிவர் புயல் நிவாரண மீட்புப் பணிகளுக்கு தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார். நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் தமிழக அரசுக்கு உதவ மத்திய குழுவையும் அனுப்ப தயாராக உள்ளோம் என்று மோடி தெரிவித்துள்ளார். நிவர் புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.