சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.1.98 கோடிக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.