சென்னை: தமிழ்நாட்டில் கருத்துரிமை பறிக்கப்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொழிலன் எழுதிய நூலுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொழிலன் வேதவெறி இந்தியா குறித்து எழுதிய நூல் தமிழகத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.