டெல்லி: கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது வாழ்க்கை முழுவதும், அவர் கால்பந்து மைதானத்தில் சில சிறந்த விளையாட்டு தருணங்களை எங்களுக்குக் கொடுத்தார் எனவும், அவரது அகால மறைவு நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.