சென்னை: நிவர் புயல் கரையை கடந்த நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக நேற்று மாலை கிழக்கு கடற்கரை சாலை சீல் வைக்கப்பட்டது. புயல் கரையை கடந்ததையடுத்து தடுப்பு அகற்றப்பட்டு மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.