புதுச்சேரி: புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் நாராயணசாமி நேரில் ஆய்வு செய்தார். சூறைக் காற்றில் முறிந்து விழுந்த மரங்களை மீட்புக் குழுவினருடன் சேர்ந்து நாராயணசாமி அகற்றினார். புயல் பாதிப்பு தன்மை குறித்து மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.