சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசு பொது நூலகங்களில் சிறப்பாக சேவையாற்றியமைக்காக 2020ம் ஆண்டிற்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட 33 நூலகர்களுக்கு விருதுகளை வழங்கும் அடையாளமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5 நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதிற்கான நற்சான்றிதழ்கள், தலா 50 கிராம் வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் தலா 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, கௌரவித்தார். இதில்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் சண்முகம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், பொது நூலக இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) நாகராஜமுருகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.