காரைக்குடி: காரைக்குடியில் நிவர் புயல் காரணமாக பல்லவன் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வழக்கம் போல் ரயில் நிலையம் வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நிவர் புயல் காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த தகவல் கிடைக்காததால் முன்பதிவு செய்த பயணிகள் ரயில் நிலையத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
குறும்செய்தி வராததால் ரயில் நிலையத்துக்கு வந்ததாகவும், ரயில் நிலையத்தில் தகவல் சொல்வதற்கு கூட அதிகாரிகள் யாரும் இல்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்துக்கு செல்ல ஒன்னரை கிலோ மீட்டர் தூரம் என்பதாலும், பேருந்து வசதி இல்லாததாலும் ரயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.