×

ஆத்மாவை கடவுள் ஆசீர்வதிப்பார்: காங். மூத்த தலைவர் அகமது படேல் மறைவிற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், அரசியல் தலைவர்கள் இரங்கல்.!!!

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் மறைவிற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,  எம்.பி.யுமான அகமது படேல் (71) கொரோனாவால் பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அகமது படேல்  காலமானார்.

இந்நிலையில், அகமது படேல் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக்  கெலாட்,

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மல்லிகார்ஜூன கார்கே எம்பி, முன்னாள் மந்திரி ஜிதின் பிரசாதா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகரி, திமுக எம்.பி.  கனிமொழி எம்பி, அபிஷேக் சிங்வி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராம்நாத் கோவிந்த் டுவிட்:

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல் இல்லை என்பதை அறிந்து மன உளைச்சலுக்கு ஆளானேன். ஒரு புத்திசாலித்தனமான  நாடாளுமன்ற உறுப்பினர், ஸ்ரீ படேல் ஒரு மூலோபாயவாதியின் திறன்களையும் ஒரு வெகுஜனத் தலைவரின் கவர்ச்சியையும் இணைத்தார். அவரது நட்பு அவரை கட்சி வழிகளில் நண்பர்களை வென்றது. அவரது குடும்பத்தினருக்கும்  நண்பர்களுக்கும் எனது இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

வெங்கையா நாயுடு டுவிட்:

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாநிலங்களவை எம்.பி., ஸ்ரீ அகமது படேல் காலமானதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவர் ஒரு திறமையான  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார், அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதும் தலைவர்களுடன் எப்போதும் நல்லுறவைப் பேணி வந்தார். துக்கமடைந்த குடும்ப உறுப்பினர்களுக்கு எனது இரங்கல். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்  என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்:

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அகமது படேல் ஜி மறைந்ததில் வருத்தம் அடைகிறேன். அவர் பொது வாழ்க்கையில் பல ஆண்டுகள் கழித்தார், சமூகத்திற்கு சேவை செய்தார். அவரது  கூர்மையான மனதுக்கு பெயர் பெற்றவர், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதில் அவர் வகித்த பங்கு எப்போதும் நினைவில் இருக்கும். அவரது மகன் பைசலுடன் பேசி இரங்கல் தெரிவித்தார். அகமது பாயின் ஆத்மா நிம்மதியாக இருக்கட்டும்  என்று பதிவிட்டுள்ளார்.

அமித்ஷா டுவிட்:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் மரணம் குறித்த தகவல்கள் மிகவும் வருத்தமாக உள்ளன. காங்கிரஸ் கட்சி மற்றும்  பொது வாழ்க்கையில் அகமது படேல் ஜி ஒரு பெரிய பங்களிப்பை வழங்கினார். இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். புறப்பட்ட ஆத்மாவை கடவுள் ஆசீர்வதிப்பார்  என்று பதிவிட்டுள்ளார்.

சோனியா காந்தி:

தனது முழு வாழ்க்கையையும் காங்கிரசுக்கு அர்ப்பணித்த அகமது படேலை இழந்துவிட்டதாகவும், ஈடுசெய்ய முடியாத நண்பர், விசுவாசமுள்ள தொண்டரை இழந்துவிட்டதாகவும் சோனியா காந்தி கூறி உள்ளார். அகமது பட்டேல் மறைவால்  துயரத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Tags : God ,senior leader ,President ,Vice President ,leaders ,death , God bless the soul: Cong. President, Vice President, Prime Minister, Political leaders mourn the death of senior leader Ahmed Patel. !!!
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?