சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை முழுவதும் உள்ள விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். நண்பகல் 12 மணிக்குள் அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். சென்னையில் பேனர் மற்றும் பெயர் பலகைகளை சம்பந்தப்பட்டவர்கள் அகற்ற வேண்டும் என கூறினார்.