சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஊர்ப்பக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாததே வெள்ளநீர் தேக்கத்திற்கு கரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.