சென்னை: 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நண்பகல் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கபடவுள்ளது. இதன் காரணமாக கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏரி திறக்கப்பட உள்ளதால் பொதுப்பணி துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உட்பட பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இன்று மதியம் 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படும் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.