×

ஒரே நாளில் 44,376 பேருக்கு பாதிப்பு... நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92 லட்சத்தை தாண்டியது...

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.34 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 92 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக  பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 44,376 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 92,22,217ஆக உயர்ந்தது.

* புதிதாக 481 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,34,699 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 37,816  பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 86,42,771 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,44,746 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 93.72 % ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.46% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.82% ஆக குறைந்துள்ளது.

Tags : corona victims ,country , India, corona, healed, rate
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...