×

நாயை விட்டு ஆசிரியையை கடிக்க வைத்த பள்ளி தாளாளர் கைது

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை விநாயகபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீமதி (31).  இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், தண்டையார்பேட்டை தண்டையார் நகரை சேர்ந்த கார்த்திக் (எ) பிரேம்நாத் (29) நடத்தி வந்த மாதா நர்சரி பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அப்போது, பள்ளி விரிவாக்க பணிக்காக ஸ்ரீ மதியிடம் 27 சவரன் நகைகளை பிரேம்நாத் வாங்கியுள்ளார். ஆனால், அைத திருப்பி தரவில்லை, என கூறப்படுகிறது. இதுபற்றி ஸ்ரீமதி பலமுறை பிரேம்நாத்திடம் கேட்டபோதும், தராமல் அலைக்கழித்துள்ளார்.இந்நிலையில், ஸ்ரீமதி நேற்று முன்தினம் பிரேம்நாத் வீட்டிற்கு சென்று, தனது நகைகளை திருப்பி கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த பிரேம்நாத் வீட்டில் வளர்க்கும் நாயை ஸ்ரீமதி மீது ஏவி விட்டுள்ளார். நாய் கடித்ததில் ஸ்ரீமதி முகம், கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனை யில் சேர்த்தனர். புகாரின் பேரில், காசிமேடு போலீசார் வழக்கு பதிந்து, பிரேம்நாத்தை  கைது செய்து சிறையில் அடைத்தனர்.   


Tags : teacher , Schoolgirl arrested for leaving teacher to bite dog
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...