×

கறி கடைக்காரர் வெட்டிக்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மப்பேடு சாலையில் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (37) கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். நேற்று மாலை சுங்குவார்சத்திரம் சாலையில் சென்றபோது, 4 பேர் இவரை வெட்டிக் கொலை கொலை செய்துவிட்டு தப்பினர். தகவலறிந்து வந்த மப்பேடு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டாரா என விசாரிக்கின்றனர்.



Tags : Curry shopkeeper murder
× RELATED மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை