×

வாகன விபத்தில் தனியார் ஊழியர் பலி

பெரும்புதூர்: வஞ்சுவாஞ்சேரி பகுதியில் பைக் மீது மினி லாரி மோதி, தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அடுத்த ஆத்தனஞ்சேரி எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் தயாளன் (55). ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர். இந்நிலையில், நேற்று காலை தயாளன், வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். வண்டலூர் - வாலாஜாபாத் சாலை வழியாக ஒரகடம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். வஞ்சுவாஞ்சேரி அருகே சென்ற போது பின்னால், வேகமாக வந்த மினி லாரி பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், மினி லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : car crash , Private employee killed in car crash
× RELATED கடலூர் அருகே மரத்தின் மீது கார் மோதி...