மதுரை: தமிழகத்தில் இதுவரை எத்தனை மதுபான கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது? எத்தனை மதுபான கடைகளில் அத்துமீறல் நடைபெற்று வருகிறது? அவைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர். கும்பகோணத்தில் புதிய மதுபானக்கடைக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.