×

கடன் பிரச்சனையில் தவித்ததால் மனைவி சேலையில் தூக்கிட்டு கணவன் பரிதாப சாவு

ஆவடி: கடன் பிரச்சனையில் தவித்த நபர், மனைவி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி சிரஞ்சீவி நகர் ரோஜா தெருவை சேர்ந்தவர் கணேசன் (51). இவர் கேஸ் ஏஜென்சியில் பணியாற்றினார். இவரின் மனைவி சுப்புலட்சுமி. தனது மகளின் திருமணம் மற்றும் குடும்ப செலவுக்கு உறவினர்கள், நண்பர்களிடம் கணேசன் கடன் வாங்கியதாக தெரிகிறது. பின்னர் அந்த பணத்தை கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் கடும் மனவேதனையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்து கணேசன் மாயமானார். அவரை மனைவி மற்றும் உறவினர்கள் தேடியபோது வீட்டில் உள்ள குளியல் அறையில் மனைவி சேலையில்  தூக்கிட்டு கணேசன் இறந்துகிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பார்த்து கதறி துடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கணேசன் சடலத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். எஸ்ஐ விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றார்.

Tags : Husband hangs wife in sari due to debt
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...