×

பெற்றோர் திட்டியதால் மாணவி தீக்குளித்து பலி: சென்னை அமைந்தகரையில் சோகம்

அண்ணா நகர்: சென்னை அமைந்தகரை பிபி தோட்டம் 5வது தெருவை சேர்ந்தவர் பரந்தாமன் (45). இவரது மனைவி கோமதி (43). இவர்களது மகள் மாலதி(14) அதே பகுதியில் அவரது பாட்டி சகுந்தலா (68) என்பவரது வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை சிறுமி மாலதி வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தபோது, இதனைப் பார்த்த தாய் கோமதி விளையாடியது போதும், வீட்டிற்குள் வந்து அமைதியாக இரு என கூறியுள்ளார். இதில் மனமுடைந்த சிறுமி மாலதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

இதில் படுகாயமடைந்து துடித்த அவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமி மாலதி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணி அளவில் பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Student ,death ,parents ,Chennai Amainthakarai , Student burnt to death by parents' insults: Tragedy in Chennai
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...