புதுச்சேரி: புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்ததாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து புதுச்சேரி முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். புதுச்சேரியில் எடுக்கப்படுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.