×

நிவர் புயல் காரணமாக அரசு அறிவித்துள்ள 6 மாவட்டங்களுக்கும் இன்றும் நாளையும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் காரணமாக அரசு அறிவித்துள்ள 6 மாவட்டங்களுக்கும் இன்றும் நாளையும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மதியம் 1 மணி முதல் மறு அறிவிப்பு வெளிவரும் வரை பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் வழியாக செல்லும் திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கும் அரசு பேருந்து சேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Announcement ,Omni ,districts ,storm ,Nivar ,government , Nivar storm, 6 districts, Omni buses, not operated
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...