பொன்னேரி: பழவேற்காட்டில் புதுவாழ்வு சமூக நல அறக்கட்டளை சார்பில் சென்னை அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர்கள் உதவியுடன் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கோட்டைக்குப்பம் ஊராட்சி தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். புனிதமகிமை மாதா திருத்தல அதிபர் கேப்ரியல் ஆரோக்கியராஜ் முகாமை துவக்கிவைத்தார். புதுவாழ்வு சமூக நல அறக்கட்டளை தலைவர் வெற்றிக்குமார், செயலாளர் கோவர்த்தனன், பொருளாளர் சேகர், அருள், செந்தில் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். மக்கள் தொடர்பு அலுவலர் தூயவன் நன்றி கூறினார். இதில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனம் மூலம் நோயாளிகளுக்கு ஈசிஜி உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கோட்டைக்குப்பம் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், நடுவூர் மாதாக்குப்பம் கிராம நிர்வாகிகள் மற்றும் பழவேற்காடு பகுதி சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்துகொண்டனர்.