புதுச்சேரி: புதுச்சேரியில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். முறிந்து விழும் நிலையில் உள்ள மரக்கிளைகள் வெட்டப்படும். பாதுகாப்பு இல்லாத பதாகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.