மதுரை: பணம் இருப்பவர்களுக்கு தான் காவல்துறை என்றால் ஏழைகள் எங்கே செல்வார்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. மணல் மாபியாக்களுக்கு தான் போலீஸ் பாதுகாப்பு தருமா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. சாத்தான்குளம், துப்பாக்கிச்சூடுக்கு பிறகும் தூத்துக்குடி போலீஸ் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என நீதிபதிகள் கூறினார்.