×

புதிதாக கட்டி முடித்தும் திறக்கப்படாத கழிப்பறை வளாகத்தில் புதர் மண்டி கிடக்கும் அவலம்

கரூர்: கரூர் சணப்பிரட்டி பகுதியில் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாத சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் அடுத்த சணப்பிரட்டி பகுதியில் இந்த பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக அமராவதி ஆற்றங்கரையோர பகுதியை ஒட்டி கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது.

கட்டி முடிக்கப்பட்டும் தற்போது வரை பயன்பாடின்றி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகுதியினர் ஆற்றங்கரையோரம் வசிப்பதால் அவர்களின் நலன் கருதி இதனை திரும்பவும் புதுப்பித்து தேவையான அடிப்படை தேவைகளை ஏற்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : bush mandi , Toilet
× RELATED பெரம்பலூரில் ரோலர் ஸ்கேட்டிங்...