திருவாரூர்: ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகிவிட்டது என மாணவி அட்சயா தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மன்னார்குடியை சேர்ந்த மாணவி அட்சயாவிற்கு பல்மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னையில் நடைபெற்ற மருத்துவ கல்லூரி முதற்கட்ட கலந்தாய்வில் மாணவி அட்சயாவிற்கு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது.
இது குறித்து பேசிய அட்சயா ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகிவிட்டது என்றும் மாணவர்களின் படிப்பு செலவினை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.