டெல்லி: கொரோனா சூழலை சமாளிக்க எடுத்த நடவடிக்கை பற்றி தமிழக அரசு பதில்தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.