×

ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு: துணை வேந்தர் சூரப்பாவிடம் விசாரணையை தொடங்கியது..!

சென்னை: அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை தொடங்கியது. சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள பொதிகை இல்லத்தில் விசாரணை நடைபெறுகிறது. சூரப்பா மீதான ஊழல், முறைகேடு புகார்கள் தொடர்பான விசாரணை தொடங்கியது.

அரியர் தேர்ச்சி விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பல விவகாரங்களில் தமிழக அரசுக்கும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. அதுமட்டுமில்லாமல் சூரப்பா மீது ஊழல் புகார்களும் எழுந்தன. இதனால் சூரப்பாவை தகுதி நீக்கம் செய்ய முடிவெடுத்த, புகார்கள் குறித்து விசாரிக்க கடந்த 11ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை நியமித்தது. அந்த குழுவின் பரிந்துரையின் படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீது ரூபாய் 700 கோடி ஊழல் புகார் மற்றும் முறைகேடான பணி நியமனங்கள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற பல்வேறு தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்ததன் காரணமாக குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மையை ஆராய்வதற்காக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.  அறிவித்தது. சென்னை பசுமை வழி சாலையில் உள்ள பொதிகை இல்லத்தில் கலையரசன் தலைமையிலான குழு சூரப்பாவிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Kalaiyarasan ,Panel ,Vander Surappa ,trial , Anna University, Vice-Chancellor, Surappa, Inquiry, commenced
× RELATED கடல் அலையில் சிக்கி பிளஸ் 2 மாணவன் பலி