×

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட 45 நாள் பரோல் காலம் இன்றுடன் நிறைவு: மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல்..!

திருப்பத்தூர்: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் வந்துள்ள பேரறிவாளன் சிறைக்கு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட 45 நாள் பரோல் காலம் இன்றுடன் நிறைவு அடைந்துள்ளது. பரோல் காலம் முடிவடைந்ததால் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என அவரது தாயார் அற்புதம் அம்மாள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சிறுநீரக தொற்று காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, பேரறிவாளனுக்கு 45 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இந்த நிலையில், பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட 45 நாள் பரோல் காலம் இன்றுடன் நிறைவு அடைந்துள்ளது. அவர் சிறைக்கு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. பேரறிவாளன் உள்பட 7 பேரையும் நிரந்தர விடுதலை வேண்டும் என்பதே என் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.


Tags : Perarivalan , Perarivalan, parole, completion
× RELATED பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மார்ச் மாதம் விசாரணை!!