×

சென்னை யானைக்கவுனி கொலைகள்: துப்பாக்கிக் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது..!!

சென்னை: சென்னையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் துப்பாக்கி கொடுத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரை சேர்ந்த ராஜூவ் துபேவை யானைகவுனி போலீசார் கைது செய்தனர்.

சென்னை சவுகார்பேட்டை உள்ள குடியிருப்பில் வசித்து வந்த தலில்சந்த், அவரது மனைவி புஷ்பா பாய் மற்றும் மகன் ஷீத்தல் சந்த் ஆகிய 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், கைலாஷ், அவரது கூட்டாளிகளான கொல்கத்தாவைச் சேர்ந்த ரவீந்திரநாத், விஜய் உத்தம் கமல் ஆகியோரை கைது செய்த யானைக்கவுனி போலீசார், மூவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா, விலாஸ் மற்றும் ராஜிவ் ஷிண்டே ஆகியோர் ஆக்ராவில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, முன்னாள் ராணுவ அதிகாரி ராஜுவ் துபேவுக்கு சொந்தமானது என தெரியவந்தது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், ராஜூவ் துபேவின் மனைவியும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான மது துபேவின் பெயரில் உள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து ராஜுவ் துபே, அவரது மனைவி மது துபே ஆகியோரை நேற்று சென்னைக்கு அழைத்து வந்த போலீசார், இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து, இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கைலாஷிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியின் உரிமையாளர் முன்னாள் ராணுவ அதிகாரி ராஜீவ் துபே என்பது தெரிய வந்துள்ளது. மூன்று பேரை கொலை செய்ய துப்பாக்கிக் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : murders ,Chennai Yanaikkavuni ,army officer , Chennai, Yanaikkavuni, murders, retired army officer, arrested
× RELATED மும்பை தாராவியில் இருந்து ராணுவ அதிகாரியாக உமேஷ் கீலு தேர்வு..!!