சேலம்: மேட்டூர் அருகே அமரந்திட்டு பகுதியில் குடும்பச்சண்டைல் ஈடுபட்ட முதியவரை 2 போலீசார் சேர்ந்து தாக்கிய நிகழ்வு சர்ச்சையாகியுள்ளது. மேச்சேரி -தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு மேச்சேரி தலைமை காவலர்கள் இருசப்பன் மற்றும் பாபு ஆகியோர் மப்டி உடையில் நின்று அப்பகுதியில் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்துள்ளனர்.
அப்போது அமரந்திட்டு ராகவேந்திரா பள்ளி அருகே சாலையோரம் மளிகை கடை வைத்துள்ள முதியவர் ஒருவர் அவர் குடும்பத்தினருடன் சண்டையிட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு சென்ற மேச்சேரி தலைமை காவலர்கள் அந்த முதியவரை தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த கட்சி சமூக வலைத்தளங்களில் பரவிவரும் நிலையில், முதியவரை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.