டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண் குடும்பம் வீட்டில் சிறைவைக்கப்பட்டதற்கு ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை உ.பி., பாஜக., அரசு துன்புறுத்தி வருவதை ஏற்க முடியாது, ஹத்ராஸ் பெண் கொலை வழக்கு பற்றிய விடையை நாடே அரசிடமிருந்து எதிர்பார்க்கிறது என்று தெரிவித்துள்ளார்.