×

நாகர்கோவில் அருகே கால்வாயில் மிதந்து வந்த பச்சிளம் ஆண் குழந்தை சடலம்: கள்ளக்காதலில் பிறந்ததா?

பூதப்பாண்டி : நாகர்கோவில் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை சடலம் கால்வாயில் மிதந்து வந்தது. நாகர்கோவில் அடுத்த இறச்சகுளம் பெரியகுளத்தில் தற்போது தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் இந்த குளத்தின் மறுகால் ஓடையிலும் அதிகளவில் தண்ணீர் செல்கிறது.  நேற்று மதியம் 2 மணியளவில் இந்த மறுகால் ஓடையில், துணியால் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் மிதந்து வந்தது. பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள ஜீவாநகர் பகுதியில் தண்ணீரில் மிதந்த நிலையில் இருந்த குழந்தையின் சடலத்தை பார்த்த பொதுமக்கள், பூதப்பாண்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறந்த சில மணி நேரத்தில் குழந்தையை கொன்று தண்ணீரில் வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது. கால்வாயில் குழந்தை சடலம் மிதந்த தகவல் அறிந்ததும் பொதுமக்களும் திரண்டனர். கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை கொன்று, துணியில் சுற்றி ஓடையில் வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குழந்தையை வீசியவர்கள் இறச்சக்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்களாக இருப்பார்களா? அல்லது வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து வீசி இருப்பார்களா? என்பது தெரிய வில்லை. இந்த பகுதி வழியாக வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. எனவே குழந்தையை கொலை செய்தவர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : baby boy ,canal ,Nagercoil , Nagercoil, canal, greenery, baby boy, corpse
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்