×

பொன்னேரியில் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா

பொன்னேரி: பொன்னேரியில் பாக முகவர்கள் மற்றும் பொது உறுப்பினர் கூட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமார், பொன்னேரி நகர செயலாளர் டாக்டர் விஸ்வநாதன் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜ் கலந்துகொண்டார். அவருக்கு கட்சி தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர் பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கூட்டத்தில் அவர் பேசியதாவது, “வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியலில் புதிய நபர்களை பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளில் திமுக தொண்டர்கள் சிறப்பாக செய்ய வேண்டும்.

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய 2 தொகுதிகளை வெற்றிபெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக அமர்ந்த வேண்டும்” என்றார். பின்னர் பொன்னேரி பேருராட்சியில் திமுகவில் உழைத்து மறைந்த 31 மூத்த முன்னோடிகளின் குடும்பங்களுக்கு ₹10,000 பொற்கிழி மற்றும் பட்டயங்கள் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், சி.எச்.சேகர், ஒன்றிய செயலாளர்கள் செல்வசேகரன், ஜெ.மூர்த்தி, மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

Tags : Ceremony ,pioneers ,DMK ,Ponneri , Ceremony to pay homage to DMK pioneers at Ponneri
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா