புழல்: தர்மபுரி பாலகோடை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (51). மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த இவர், தர்மபுரி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2017ம் ஆண்டு முதல் புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர், திடீரென தனிச்சிறைக்கு மாற்றப்பட்டார். இதை ஏற்க மறுத்த அவர், உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.