×

சேலம் அருகே நடந்த கொடூரம்; மந்திரவாதி சீரழித்த 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழிலதிபர்: பெற்றோர் திடுக்கிடும் புகார்

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 15 வயது, 12 வயதுடைய மகள்கள் உடல் நலம் சரியில்லாததால் மந்திரித்து கயிறு கட்ட நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் பகுதியை சேர்ந்த மந்திரவாதியான சேகர் என்பவரின் வீட்டுக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அந்த மந்திரவாதி, சிறுமிகளுக்கு பேய் பிடித்திருக்கிறது, அதனை ஓட்ட வேண்டும் எனக்கூறி தனது வீட்டில் தங்க வைத்துக்கொண்டார். பின்னர் 2 சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி பெற்றோர் திரும்பி வந்தபோது சிறுமிகள் தெரிவித்ததையடுத்து மங்களபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து போலி மந்திரவாதி சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த 2 சிறுமிகளையும் சேலம் அருகே சுக்கம்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் ஏற்கனவே பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர் நேற்று வீராணம் போலீசில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்தனர். அதில், ‘‘வாழப்பாடியில் இருந்த எங்களை சேலம் சுக்கம்பட்டியில் மாட்டுத் தீவனம் தொழில் செய்து வரும் ரவீந்திரன் என்பவர் வேலைக்காக அழைத்து வந்தார். மாதம் ₹15 ஆயிரம் தருவதாக கூறினார். எங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க உதவுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து நாங்கள் இங்கு குடும்பத்துடன் வந்தோம்.

இதனிடையே எங்களது குழந்தைகளை கடந்த 8 மாதமாக அவரது வீட்டில் சமையல் செய்வதற்காகவும், குடோனில் வேலை செய்வதற்காகவும் வைத்துக் கொண்டார். அப்போது எங்களது 2 குழந்தைகளையும் பலமுறை ரவீந்திரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் 2 முறை மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து கருவை கலைத்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் நாங்கள் ஊருக்கு சென்றோம். அப்போது எங்களது 2வது மகளை சமையல் செய்வதற்காக ரவீந்திரன் அவரது வீட்டிலேயே வைத்துக்கொண்டார். நாங்கள் எங்களது முதல் மகளை அழைத்துக்கொண்டு வாழப்பாடிக்கு சென்று விட்டோம்.

அப்போதும் எங்களது 2வது மகளை பலமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று தெரிவித்திருந்தனர். இதையடுத்து அம்மாப்பேட்டை மகளிர் போலீசார் பெற்றோரை அழைத்துக்கொண்டு சுக்கம்பட்டி சென்றனர். அதற்குள் ரவீந்திரன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : Entrepreneur ,atrocity ,girls ,Salem ,Parents , The atrocity near Salem; Entrepreneur who raped 2 girls who were raped by a witch: Parents startle complaint
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்